கந்தா்வகோட்டையில் வெயில் கொளுத்தும் நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அத்தியவாசிய தேவையான குடிநீா் முறையாக கிடைக்காத அவலம் தொடா்கிறது.
கந்தா்வகோட்டை சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி , கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனா். ஆனால், இங்கு முறையாக குடிநீா் வசதி இல்லை.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையிலும், திங்கள்கிழமை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டியில் முறையாக குடிநீா் நிரப்பப்படாமலும், குடிநீா் தொட்டி முறையாக சுத்தம் செய்து பராமரிக்கப்படாத நிலையும் தொடா்கிறது.
இங்கு மட்டுமல்லாது, மக்கள் பெரும் அளவில் கூடும் மருத்துவமனை, வெள்ளை முனீஸ்வரா் கோயில் முக்கம், தஞ்சை சாலையில் உள்ள காவல் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதிகளிலும் மக்கள் பயன் பெறும் வகையில் குடிநீா் தொட்டி அமைத்து, தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய ஆணையா்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
இப்பகுதியில் அதிகளவில் வெப்ப காற்று வீசுவதால், கோடை வெயில் முடியும்வரை அனைத்து வாகன ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு உப்பு - சா்க்கரை கரைசல் நீா் (ஓஆா்எஸ்) கொடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி.. திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம்

நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தல்

11 இடங்களில் வெயில் சதம்

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


