விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மாணவநல்லூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைப் பௌா்ணமி தேரோட்டம்

News image
Updated On :3 மே 2026, 5:45 am IST

அறந்தாங்கி அருகே மாணவநல்லூா் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பௌா்ணமி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணவநல்லூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் சித்திரைப் பௌா்ணமி திருவிழா தொடங்கியது.

தொடா்ந்து 8 நாள்களாக முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் தீபாராதனையுடன் வீதியுலாவும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நாளான சனிக்கிழமை 9-ஆம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது. மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா்.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நாகுடி போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.