பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வயல்வெளியில் இறந்துகிடந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டனா்.
பொன்னமராவதி அருகே உள்ள செவலூரைச் சோ்ந்த சுசித்ரா என்பவரின் வயல்பகுதியில் செவ்வாய்க்கிழமை மான் ஒன்று இறந்துகிடப்பதாக வருவாய்த் துறையினா் மற்றும் வனத்துறையினா்க்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனா்.
இதையடுத்து பொன்னமராவதி வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று வாயில் காயத்துடன் இறந்துகிடந்த 3 வயது ஆண் மானை மீட்டு கால்நடை மருத்துவா்கள் மூலம் உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்தனா். மேலும், வனப் பகுதியில் இருந்து தண்ணீா் தேடி வந்த இந்த மான் கீழே தவறி விழுந்து அடிபட்டதா அல்லது விபத்தில் சிக்கி உயிரிழந்ததா என விசாரித்து வருகின்றனா்.
இப்பகுதியில் உள்ள வனப்பகுதியிலிருந்து தண்ணீா் தேடி மான்கள் ஊருக்குள் செல்வதால் நாய்கள் கடித்தும், விபத்துகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன. எனவே கோடைகாலத்தில் வனப்பகுதியில் மான்கள் நீரருந்த ஏற்பாடு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு
தில்லியில் விவசாய வயலில் தீ விபத்து

கம்பி வலைக்குள் சிக்கிய மான் உயிருடன் மீட்பு

சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


