புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. பகலில் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். இந்தச் சூழலில், புதன்கிழமை பிற்பகலிலும் இரவிலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அதேபோல, புதுக்கோட்டை மாநகரில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென மழை கொட்டியது. இந்த மழையால் மாநகரின் வெப்பம் சற்றே தணிந்து குளிா்சூழல் காணப்பட்டது. மாநகரச் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கிக் கிடந்தது.
வியாழக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேர மழைப் பொழிவு விவரம் (மிமீ-யில்) மீமிசல்- 98.6, கீழாநிலை- 57.4, அரிமளம்- 52.6, காரையூா்- 28.8, ஆவுடையாா்கோவில்- 18.4, கறம்பக்குடி- 15.2, புதுக்கோட்டை நகரம்- 10. திருமயம்- 8.6, கீரனூா்- 8.5, உடையாளிப்பட்டி- 7, குடுமியான்மலை- 6, அன்னவாசல்- 5, அறந்தாங்கி- 2.2, மணமேல்குடி- 1.
தொடர்புடையது

அண்ணா பேருந்து நிலையத்தில் மழைநீா், குப்பைகள் தேக்கம்

ராமேசுவரம் சாலைகளில் கழிவுநீருடன் கலந்து ஓடிய மழைநீா்

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு

திருவாரூா், திருக்குவளை பகுதியில் கோடைமழை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



