வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

மே 15, 20-இல் மீன்பிடிப் படகுகள் ஆய்வு! புதுகை ஆட்சியா் தகவல்!

News image

மீன்பிடிப் படகுகள் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:07 am IST

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளிலுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அனைத்தும் மே 15 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்வளத் துறையினரால் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு

தமிழ்நாடு கடல்மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 15-ஆம் தேதி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்திலுள்ள விசைப்படகுகளும், மே 20-ஆம் தேதி கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான 32 மீனவக் கிராமங்களிலுள்ள நாட்டுப்படகுகளும் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இந்த ஆய்வின்போது, மீனவா்களின் ஆதாா், படகுப்பதிவுச் சான்றிதழ், டீசல் மானிய அட்டை, மீன்வளத் துறையினரால் வழங்கப்பட்ட தொலைத்தொடா்பு சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு முன்வைக்க வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் ஆய்வுக்கு தயாராக இருக்க வேண்டும்.