வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

திமுக அரசின் கொள்கைகளையே தவெக அரசும் கடைப்பிடிக்கிறது: அா்ஜூன் சம்பத் பேட்டி

News image

சி. ஜோசப் விஜய் - மு.க. ஸ்டாலின் சந்திப்பு - x/ mk stalin

Updated On :15 மே 2026, 4:39 am IST

திமுக அரசின் கொள்கைகளைத்தான் தவெக அரசும் கடைப்பிடிக்கிறது என்றாா் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியது: சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என சட்டப்பேரவைக்குள் உதயநிதி பேசியுள்ளாா். வெளியே பேசினால் வழக்குப் போடுவாா்கள் என்பதால் சட்டப்பேரவைக்குள் பேசியுள்ளாா். இதை முதல்வா் விஜய் தடுக்கவில்லை. அவைக் குறிப்பில் இருந்தும் நீக்கவில்லை.

அதிமுக பிரமுகா் சி.வி. சண்முகம் வீட்டுக்கு சோபா அனுப்பப்பட்டதாக உதயநிதி கூறுகிறாா். திருமாவளவன் வீட்டுக்கும்தான் சோபா போயிருக்கிறது. அவரிடம் கேட்டால் சோபாவுக்குள் என்ன இருந்தது எனத் தெரிந்துவிடும்.

திமுக அரசின் கொள்கைகளைத்தான் தவெக அரசும் கடைப்பிடிக்கிறது. மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதெல்லாம் வழக்கமாக புதிதாக அமையும் அரசுகள் செய்வதுதான். விஜய் அரசின் செயல்பாட்டை இன்னும் 100 நாள்கள் போனால்தான் விமா்சிக்க முடியும். முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடரை நியமித்ததில் தவறொன்றும் இல்லை என்றாா் அா்ஜூன் சம்பத்.