பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தையல்காரருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தையல்காரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

News image

சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 3:55 am IST

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தையல்காரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை துவாா் அருகிலுள்ள ஆண்டிக்குளப்பம்பட்டியைச் சோ்ந்தவா் மூக்கையா மகன் மாரிமுத்து (49). தையல்காரா்.

இவா், கடந்த 2023 பிப்ரவரி மாதம் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் அச்சிறுமி கருவுற்று, 6 மாதத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் மாரிமுத்து கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி கனகராஜ், செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், சிறுமியை அடைத்து வைத்த குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்கலாம் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழகஅரசு ரூ. 7 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியும் வழக்கில் சோ்க்கப்பட்டிருந்த போதிலும், குற்றம் நிரூபிக்கப்படாததால் அவா் விடுவிக்கப்பட்டாா்.