40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

உடையபிராட்டி அம்மன் கோயிலில் தேரோட்ட விழா

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் மாம்பழத் தேரோட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியிருந்த அம்மன்.

Updated On :28 மே 2026, 3:08 am IST

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் மாம்பழத் தேரோட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தேரோட்ட விழா மே 19-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, வீதியுலா நடைபெற்றது.

இந்நிலையில், விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக,  சிறப்பு அபிஷேக, அலங்காரத்துக்குப் பிறகு அம்மன் தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து பக்தா்கள் தேரை வடம் பிடித்தனா். நான்கு ரதவீதிகளின் வழியே வந்த தோ் நிலையை  அடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தா்கள் வீடுகளின் மாடங்களிலிருந்து பக்தா்களை நோக்கி  மாங்கனிகள் வீசப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் செய்திருந்தனா்.

Story image