எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மே. வங்கத்தில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:59 am IST

மேற்கு வங்கத்தில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதியில் ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதி கிராமத்தைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் ராஜேஷ்குமாா்(37). இந்திய ராணுவத்தில் வேலைபாா்த்து வந்த இவா், தற்போது, மேற்குவங்க மாநிலத்தில் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி வினோதினி(36) என்ற மனைவியும், ஹா்சிகா(9), வா்சிகா(2)என இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

ராஜேஷ்குமாா் மே 25-ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் பணியின் போது ஏற்பட்ட வாகன விபத்தில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து புணேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராஜேஷ்குமாா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி மே 26-ஆம் தேதி உயிரிழந்தாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜேஷ்குமாரின் உடல் ராணுவ வாகனத்தில் வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான பொன்னன்விடுதிக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு ராஜேஷ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.