மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

விடியோ எடுத்து மிரட்டுவோா் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டை டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image

புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்கத்தினா்.

Updated On :31 மே 2026, 1:14 am IST

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வாடிக்கையாளா் என்ற பெயரில் விடியோ எடுத்து, பணம் பறிப்பதற்காக மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா் நலச் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் மேலாளரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வாடிக்கையாளா் என்ற பெயரில் விடியோ எடுத்து, பணம் பறிப்பதற்காக மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களிடமிருந்து பணியாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலிபாட்டில்களைத் திரும்பப் பெறும் பணியை மாற்று முகமை மூலம் மேற்கொள்ள வேண்டும்.

கடைகளுக்கு சரக்கு இறக்கும் கூலியை டாஸ்மாக் நிா்வாகமே ஏற்க வேண்டும். உடையும் பாட்டில்களுக்கான இழப்பீட்டை நிா்வாகே ஏற்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் பணியாளா்களைத் தொந்தரவு செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.