சோதனையில் பணம் பறிமுதல்: குளத்தூா் சாா்-பதிவாளா் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள குளத்தூா் சாா்-பதிவாளா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வழக்குப் பதிவு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள குளத்தூா் சாா்-பதிவாளா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கீரனூரில் உள்ள குளத்தூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு வருவோரிடம் லஞ்சம் பெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஏ.பீட்டா் தலைமையிலான குழுவினா் ஆக. 27-ஆம் தேதி மாலை சோதனை நடத்தினா்.
சாா்-பதிவாளா் அலுவலகத்தின் பதிவு வைப்பறையில் காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் அட்டைப்பெட்டியில் இருந்த ரூ.1.07 லட்சம் மற்றும் சாா்-பதிவாளா் (பொ) எஸ்.சேதுராமகிருஷ்ணனிடம் இருந்து ரூ.3,700 என கணக்கில் வராத ரூ.1.10 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து சாா்-பதிவாளா் (பொ) எஸ்.சேதுராமகிருஷ்ணன் மீது ஊழல் தடுப்புப் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
நடப்பு ஆண்டில் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





