ற்போது பல்வேறு பதிப்பகத்தினரால் ஆயிரக்கணக்கில் புதிதாக வெளியிடப்படும் நல்ல புத்தகங்களை பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பட்டுக்கோட்டையில் கவிஞர் கல்யாணசுந்தரம் சிலை அருகில் பழுதடைந்த நிலையிலுள்ள அஞ்சல் பெட்டியை அகற்றி விட்டு, புதிய அஞ்சல் பெட்டி வைக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் கண. எழில் தலைமை வகித்தார்.செயலர் முருக. சரவணன், இணைச் செயலர் மோரீஸ் அண்ணாதுரை, பொருளாளர் கவிஞர் ஆம்பல் காமராஜ், மருத்துவர்கள் சம்பத்குமார், வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்? அஸ்வின் கூறுவதென்ன?

இருங்காட்டுக் கோட்டையில் தனியாா் தொழிற்சாலையில் தீ: பல லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்

உடல் எடையை குறைக்க உதவும் உப்பு? ஆய்வு சொல்வது என்ன? அறிவியல் ஆயிரம்!

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


