ற்போது பல்வேறு பதிப்பகத்தினரால் ஆயிரக்கணக்கில் புதிதாக வெளியிடப்படும் நல்ல புத்தகங்களை பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பட்டுக்கோட்டையில் கவிஞர் கல்யாணசுந்தரம் சிலை அருகில் பழுதடைந்த நிலையிலுள்ள அஞ்சல் பெட்டியை அகற்றி விட்டு, புதிய அஞ்சல் பெட்டி வைக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் கண. எழில் தலைமை வகித்தார்.செயலர் முருக. சரவணன், இணைச் செயலர் மோரீஸ் அண்ணாதுரை, பொருளாளர் கவிஞர் ஆம்பல் காமராஜ், மருத்துவர்கள் சம்பத்குமார், வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓலா கேப்ஸ் இழப்பு ரூ. 662.4 கோடியாக அதிகரிப்பு!
கடவுள் அவதாரம்... சூர்யாவின் கருப்பு டிரைலர் வெளியானது!

மது கடைகளை மூட அரசு முன் வருமா? - ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
