தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மரக்கிளை விழுந்து காயமடைந்தவர் சாவு

பட்டுக்கோட்டை நகரம், லெட்சத்தோப்பு கணபதி தெருவைச் சேர்ந்தவர் பி. பாலசுப்பிரமணியன் (65).

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:11 am

DIN

பட்டுக்கோட்டை நகரம், லெட்சத்தோப்பு கணபதி தெருவைச் சேர்ந்தவர் பி. பாலசுப்பிரமணியன் (65).
இவர், செப்.28-ம் தேதி காலை தனது வீட்டின் கொல்லைப்புறத்திலுள்ள குளியலறைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் அங்கிருந்த மரத்திலிருந்து பெரிய கிளை முறிந்து பாலசுப்பிரமணியன் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன் தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை  காலை உயிரிழந்தார். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.