இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கரந்தை கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூர் கரந்தையில் உள்ள கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 பிப்ரவரி 2017, 12:24 am

தஞ்சாவூர் கரந்தையில் உள்ள கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்பர் பாடிய இத்தலம் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு முற்பட்டது.
மேலும், அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், குடமுழுக்கு விழா ஜன. 27-ஆம் தேதி விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது.
ஜன. 28-ஆம் தேதி நவக்ரஹ ஹோமம், 29-ஆம் தேதி சூக்த ஹோமம், 30-ஆம் தேதி முதல் கால யாக பூஜை, 31-ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், பிப். 1-ஆம் தேதி நான்காம், ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து, வியாழக்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜைகள் முடிவடைந்த பிறகு 9.45 மணியளவில் விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், சுவாமி, அம்பாள் கருவறை குடமுழுக்கும் நடைபெற்றன.
மாலையில் மகா அபிஷேகமும், இரவு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.