ஒரத்தநாடு வட்டம், வடக்கூரில் பகுதிநேர செவிலியரை தாக்கிய இரண்டு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவர் தொகுப்பு ஊதியத்தில் பகுதி நேர செவிலியராக பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை அதே ஊரை சேர்ந்த திருவாசகம் மகன் கணபதி, ராமமூர்த்தி மகன் சிவக்குமார் ஆகிய இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்து ரத்த காயங்களுடன் இரவு வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்தனராம். அப்போது, ஐஸ்வர்யா தனது ஓய்வு அறையில் இருந்து வெளியே வந்துள்ளார். குடிபோதையில் இருந்த கணபதி, சிவக்குமார் இருவரும் ஏன் காலதாமதமாக வருகிறாய் என்று கூறி ஐஸ்வர்யா மீது செருப்பை எடுத்து வீசி, தகாத வார்த்தையால் திட்டி, கழுத்தை பிடித்து நெரித்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மருத்துவமனை ஊழியர் கூச்சலிட்டதால் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனராம். இதுகுறித்து ஐஸ்வர்யா அளித்த புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள்களுக்கு இளைஞா்கள் இரையாக வேண்டாம்: டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் அறிவுரை

அயோத்தியா ராமா் கோயில் நன்கொடை வழக்கு: எஸ்ஐடி விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேஜரிவால் கேள்வி

55,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


