வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெரியகோயில் எதிரே மனிதச் சங்கிலி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பெரியகோயில் எதிரே டெல்டா மாணவர் இயக்கத்தினர்

Updated On :9 ஏப்ரல் 2018, 2:46 am

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பெரியகோயில் எதிரே டெல்டா மாணவர் இயக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புப்படி மேலாண்மை வாரியத்தை அமைத்து கொடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. மத்திய அரசு கர்நாடகத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தஞ்சாவூரில் டெல்டா மாணவர் இயக்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியகோயில் எதிரே உள்ள நடைபாதையில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். இதில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல்கேஸ், ஸ்டெர்லைட் போன்றவற்றுக்கு எதிராக அட்டைகளை ஏந்திய படி நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.