கும்பகோணம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருச்சேறை சாளுவம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் முருகேசன் (45). அரைவை மில் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (40). இவர்களுக்கு ஐஸ்வர்யா (21), மோனிஷா (15) ஆகிய இரு மகள்களும், தமிழ்வேந்தன் (12), நிவாஸ் (9), ராகுல் (8) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
முருகேசன் தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி மல்லிகாவிடம் தகராறு செய்வாராம். இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா, திங்கள்கிழமை இரவு வீட்டில் யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் விஷம் கலந்து, தனது 5 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இவர்கள் அனைவரும் மயக்க மடைந்து கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், மல்லிகா மற்றும் அவரது 5 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் வாக்களிப்பு! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைப்பு!

106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த திலக் வர்மா..! நடப்பு சீசனில் நீண்ட தூரம்!

பஞ்சாபுக்கு தொடா்ந்து 5-ஆவது தோல்வி
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
