தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகமும், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனமும் திங்கள்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
சுவடியியல், கலை பண்பாடு, சமூகம், நில அறிவியல் தொடர்பாக மாணவர்களுக்குப் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்துகளைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும், மாநாடு, கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கத்தை இணைந்து மேற்கொள்வதற்கும், ஆய்வு தரவுகளைப் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பான செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இப்புரிந்துணர்வு செய்து கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், பிரெஞ்சு நிறுவன இயக்குநர் பிரிட்டிக் லேன்டி கையெழுத்திட்டனர். அப்போது, தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிப் புலத் தலைவர் ந. அதியமான், முனைவர்கள் சு. ராஜவேலு, மோ.கோ. கோவைமணி, பேராசிரியர் ஒய். சுப்பராயலு, பி. கணேசன், செந்தில்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


