பாலைவனநாதர் கோயிலில் சித்ரா பௌர்ணமி வழிபாடு

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் உள்ள தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் உள்ள தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் உள்ள மூலவர் பாலைவனநாதர், தவளவெண்ணகை அம்மன்,விநாயகர், முருகர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. 
தொடர்ந்து, கோயில் வெளிசுற்று பிரகாரத்தில் பக்தர்கள் தேவார, திருவாசகங்களை பாடிய படி பெளர்ணமி திருச்சுற்று வழிபாடு செய்தனர். 
திரளானோர் கலந்து கொண்டு பெளர்ணமி கிரிவலம் வந்து சுவாமி, அம்மன் உள்ளிட்டோரை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், பாபநாசம் ஆன்மிக பேரவையினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com