400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

மக்களவைத் தேர்தலில்  இரட்டை இலை சின்னத்தை வைத்திருப்பவர்களுக்கே வெற்றி: ஆர். வைத்திலிங்கம்

மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை வைத்திருக்கும் நாங்களே அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:18 am IST

மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை வைத்திருக்கும் நாங்களே அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் கடந்த 19 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டு 19 வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. தஞ்சாவூர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று,  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு அரசின் நிவாரண உதவியாக தலா ரூ. 5 ஆயிரமும்,  வேஷ்டி- சேலைகளையும் வழங்கினார். இதில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி,  புண்ணியமூர்த்தி,  சரவணன்,  ரமேஷ்,  வட்டாட்சியர் அருணகிரி, ஒன்றிய செயலாளர் வீரணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையடுத்து எம்.பி. ஆர். வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 30 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என யார் வேண்டுமானாலும் கூறலாம்; சொன்னதை செய்துக் காட்டிய ஜெயலலிதா, அதிமுகவின் சின்னமான இரட்டை இலை, கொடியை பெற்றிருக்கும் நாங்கள்தான் (அதிமுக) தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இதேபோல,  திருப்பரங்குன்றம் ஜெயலலிதாவின் கோட்டை. இத்தொகுதியில் எங்களுக்கு (அதிமுகவுக்கு) வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடைமடைக்கு தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் செய்து வருகிறது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.