உலகத் தாய்மொழி நாளையொட்டி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வாயில் முன் தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இயக்கத்தின் நகரக் குழு உறுப்பினர் அரவிந்த்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கட்டணமின்றி தாய் மொழியில் பெறுவதற்குப் போராட வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், இயக்கத்தின் பொதுச் செயலர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் மு. இளமுருகன் தலைமை வகித்தார். இதில், மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். துணை முதல்வர் ந. பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.