காய்கறிகள் சாகுபடி பரவலாக்கம் குறித்த விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள அய்யாசாமிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வளத் திட்டத்தின் கீழ் காவிரி பாசனப் பகுதிகளில் துல்லியப்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள அய்யாசாமிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வளத் திட்டத்தின் கீழ் காவிரி பாசனப் பகுதிகளில் துல்லியப் பண்ணையம் முறையில் காய்கறிகள் சாகுபடி பரவலாக்கம் மற்றும் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்ப மையம், காட்டுத்தோட்டம் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆய்வு நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் நீர் நுட்ப மையத் தலைவர் எஸ்பி. ராமநாதன் காவிரி பாசனப் பகுதிகளில் துல்லியப் பண்ணைய முறையில் காய்கறிகள் பரவலாக்கம் திட்டத்தைப் பற்றிப் பேசினார். 
மேலும், விவசாயிகளிடம் இத்திட்டத்தைப் பற்றிய சந்தேகங்களை எடுத்துக் கூறினார்.
மண் மற்றும் நீர் மேலாண்மை ஆய்வு நிலைய உதவிப் பேராசிரியர் மா. நாகராஜன், முதுநிலை ஆராய்ச்சியாளர் தீ. அகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com