மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரக்கோரி பிரசாரம்

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருவதற்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றார்

Updated On :9 ஜூலை 2018, 3:20 am

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருவதற்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
மாணவர்கள் தற்போது அதிகளவில் மூடநம்பிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் சட்டத்தை பயன்படுத்தி அறிவியல் மனப்பான்மையை புகுத்த வேண்டும். இதனை பள்ளி முதல் கல்லூரி வரை கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறது. மத்திய அரசு கல்வித்துறையை வைத்து கொண்டு விளையாடி வருவதும், நாளுக்கொரு கொள்கை முடிவை எடுப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. நீட் தேர்வின் மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களை வெளிமாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது.  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் அரசு, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஒன்றரை ஆண்டுகளாகியும் அமல்படுத்தாமல், மத்தியில் ஆள்பவர்கள் கிடப்பில் போட்டுள்ளனர். ஏன் நிராகரித்தனர் என இதுவரை தெரியவில்லை. இதனை தட்டி கேட்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.
கல்வியை மத்தியஅரசு காவி மயமாக்கி வருகிறது. தற்போது உள்ள கல்வியில் பொதுஒழுக்கம் இல்லை. மத்திய அரசின் பல்வேறு தேர்வு முறைகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவதற்காக நாட்டில் உள்ள பாஜக இல்லாத அனைத்து தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். எனது தலைமையில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்த பிரசாரம், முதல்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வரும் 22 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் வீரமணி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.