தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேராவூரணி அருகே  பொதுப்பாதை ஆக்கிரமிப்பு:7 பேர் மீது வழக்கு

பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமம் பள்ளி   ரோட்டில் வசித்து வருபவர் பிரான்சீஸ் சேவியர்.  (  40 ). இவர் வசிக்கும் பகுதியில்

Updated On :9 ஜூலை 2018, 3:19 am

பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமம் பள்ளி   ரோட்டில் வசித்து வருபவர் பிரான்சீஸ் சேவியர்.  (  40 ). இவர் வசிக்கும் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள பொதுப்  பாதையை பலர் பல ஆண்டுகளாக  பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்  புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஜோசப் என்பவர்  பாதையில்  லாரியில் மண் கொண்டு வந்து  ஆக்கிரமிக்கும் நோக்கத்தில்  கொட்டினாராம்.  இதை  பிரான்சீஸ் சேவியர்  தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில்  ஆத்திரமடைந்த ஜோசப்பின்  சகோதரி கிரேசி, கிரேசியின் கணவர்  ஆரோ.அருள், ஜான். அருண்பிரபு, பிரவீன்குமார், சேசு இமானுவேல், மெலீக்கீஸ்ராஜ் ஆகிய 7 பேரும்  பிரான்சீஸ்சேவியர், அவரது தந்தை பாக்கியம் ஆகியோரை வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கியதாககத் கூறப்படுகிறது.  காயமடைந்த பிரான்சீஸ் சேவியர் மற்றும் அவரது தந்தை பாக்கியம் ஆகியோர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது  அவர்களை பின் தொடர்ந்த ஆரோ அருளின் ஆட்கள்   மாந்தோப்பு என்ற  இடத்தில் மீண்டும் வழி மறித்து தாக்கினராம். இந்த சம்பவம் குறித்து பிரான்சீஸ் சேவியர், தஞ்சை எஸ்பி  செந்தில்குமார், டிஎஸ்பி  செங்கமலக்கண்ணன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ.   ஆகியோரிடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து  திருச்சிற்றம்பலம் காவல் உதவி ஆய்வாளர் ஞானசுமதி  7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.