மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தஞ்சை கோட்ட எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கம், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 1:44 am

தஞ்சை கோட்ட எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கம், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகி ஆர். சுரேஷ் தலைமை வகித்தார்.  தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் சுந்தரமூர்த்தி, கிளை மேலாளர் பாலசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், வார வேலைநாள்கள் 5 என அறிவித்திட வேண்டும், ஓய்வூதியத் திட்டத்தில் சேர இறுதி வாய்ப்பு வழங்கிட வேண்டும், புதிய பணி நியமனத்தை உடனடியாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இதில் கும்பகோணம் கிளை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.