காசநோயை கண்டறிய நடமாடும் வாகனம் தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோயைக் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகன முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோயைக் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகன முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காசநோயைக் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகனத்தை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் தொடர்ந்து மே 19-ம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாகனத்தில் பரிசோதனை செய்யும் கருவிகள் உள்ளதால், இதைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். ஜெயக்குமார், துணை இயக்குநர் (காசநோய்) (பொறுப்பு) டி. மாதவி, சுகாதாரத் துறைத் துணை இயக்குநர் ஏ. சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...