தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காவிரி: இளைஞர் பெருமன்றத்தினர்  போராட்டம் - 40 பேர் கைது

காவிரி மேலா ண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடத்தை (பழைய ஆட்சியரகம்) திங்கள்கிழமை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த 40 பேரை

News image
Updated On :14 மே 2018, 10:38 pm

DIN

காவிரி மேலா ண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடத்தை (பழைய ஆட்சியரகம்) திங்கள்கிழமை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஆற்று மணல், தாது மணல் உள்ளிட்ட இயற்கை செல்வங்களின் கொள்ளையைத் தடுக்க வேண்டும். நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் ஆகிய முழக்கங்களை எழுப்பி அண்ணா சிலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு பனகல் கட்டடத்துக்குச் சென்றனர். பின்னர், பனகல் கட்டட வாயிலை முற்றுகையிட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.கே. செல்வக்குமார் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர்கள் கோ. சக்திவேல், கே. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.