கும்பகோணத்தில் வீட்டின் கதவை உடைத்துநகை, பணம் திருட்டு
கும்பகோணத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


கும்பகோணத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் மருதமுத்து நகரை சேர்ந்த கோபால் மகன் ராஜேந்திரன் (44). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 11 ஆம் தேதி ராஜேந்திரன் தனது பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். இவரது மனைவியும், மகனும் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
இந்நிலையில், ராஜேந்திரன் திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் பணம், 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...