இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காவிரி: இளைஞர் பெருமன்றத்தினர்  போராட்டம் - 40 பேர் கைது

காவிரி மேலா ண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடத்தை (பழைய ஆட்சியரகம்) திங்கள்கிழமை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த 40 பேரை

Updated On :14 மே 2018, 10:38 pm

காவிரி மேலா ண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடத்தை (பழைய ஆட்சியரகம்) திங்கள்கிழமை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஆற்று மணல், தாது மணல் உள்ளிட்ட இயற்கை செல்வங்களின் கொள்ளையைத் தடுக்க வேண்டும். நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் ஆகிய முழக்கங்களை எழுப்பி அண்ணா சிலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு பனகல் கட்டடத்துக்குச் சென்றனர். பின்னர், பனகல் கட்டட வாயிலை முற்றுகையிட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.கே. செல்வக்குமார் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர்கள் கோ. சக்திவேல், கே. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.