குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூர் அருகேயுள்ள கொ. வல்லுண்டாம்பட்டு கிராம மக்கள் அளித்த மனு:
கொ. வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் சுமார் 500 கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்துக்கு ஓராண்டாகக் குடிநீர் வரவில்லை. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பழுது பார்க்கப்போவதாகக் கூறி குழாய்களைக் கழற்றிச் சென்றனர்.
ஆனால், மீண்டும் குழாய்களைப் பொருத்தவில்லை. இதனால், ஒரு கி.மீ. நடந்து சென்று குடிநீர் பிடித்து வரும் நிலையில் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, விரைந்து சீரமைக்க வேண்டும்.
கிராம சேவை மையம்: திருவோணம் அருகேயுள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் நெடுஞ்செழியன், வீ. அகிலன் உள்ளிட்டோர் அளித்த மனு: பின்னையூர் கிராமத்தில் கிராம சேவை மையம் கட்டுவதற்காக அடித்தளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மற்ற கிராமங்களில் இம்மையம் 15 மீட்டர் நீளத்திலும், 7.9 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படுகிறது.
ஆனால், பின்னையூர் கிராமத்தில் 8.75 மீட்டர் நீளத்திலும், 4.78 மீட்டர் அகலத்திலும் மேல் தளத்துடன் கூடிய கட்டுமானம் கட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்துடன் மட்டும் போதிய அளவுக்குக் கட்டடம் கட்டுவதற்குப் போதுமான இட வசதி உள்ளது. முதல் தள கட்டுமானம் தேவையற்றது. கிராமத்தில் உள்ள வயதானவர்கள் ஏறிச் செல்வது மிகவும் கடினம். எனவே, இதர கிராமங்களைப் போல தரைதளம் மட்டும் உரிய நீள, அகலத்துடன் கூடிய கட்டடம் கட்டுமாறு ஆணைப் பிறப்பிக்க வேண்டும்.
தாழ்வாகத் தொங்கும்
மின் கம்பி
அன்னப்பன்பேட்டை எம். செல்வராஜ் அளித்த மனு: பொந்தியாகுளம் என்ற கிராமத்தில் உள்ள எனது வயலில் நடப்பட்ட மின் கம்பம் சேதமடைந்து, கம்பி மிகவும் தாழ்வாகத் தொங்குகிறது. அறுவடை இயந்திரம், உழவு இயந்திரம் சென்றால் விபத்து நிகழ்ந்து உயிர் சேதம் ஏற்படும். எனவே, உயிர் சேதம் ஏற்படும் முன்பு மின் கம்பத்தை மாற்றித்தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

