நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மே 25 இல் திருக்கல்யாணம்

கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேசுவர சுவாமிக்கு மே 25-ஆம் தேதி  திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. 

Updated On :21 மே 2018, 1:55 am

கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேசுவர சுவாமிக்கு மே 25-ஆம் தேதி  திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. 
இதையொட்டி,  மே 24ஆம் தேதி நிச்சயதார்த்த விழா நடைபெறுகிறது. இதையொட்டி இரவு 7மணிக்கு அம்பாள் தவக்கோல நிகழ்வும், அன்றிரவு  மங்களாம்பிகைக்கு சிவபெருமான் காட்சியளித்தலும், திருக்கல்யாணத்திற்கான நிச்சய தாம்பூல நிகழ்வும் நடைபெறும். 25 ஆம் தேதி காலை மாலை மாற்றுதலும், ஊஞ்சலடி உற்சவமும், 12 மணி முதல் 1 மணிக்குள் மங்களாம்பிகை அம்பாளுக்கும், ஆதிகும்பேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
வரும் 29 ஆம் தேதி காலை திருக்கோயிலிலிருந்து சுவாமி அம்பாளுடன் புறப்பாடு நடைபெற்று, பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 
அதை தொடர்ந்து சுவாமி, அம்பாள் சங்கரமடத்தில் எழுந்தருளுகின்றனர். 30 ஆம் தேதிசிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகளுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.