மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

குறை தீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2,86,501 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.

Updated On :21 மே 2018, 9:09 pm

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2,86,501 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 4 பேருக்கு மருத்துவ நிதியாக ரூ.1,46,622-க்கான காசோலைகளையும், இரு பயனாளிகளுக்குச் சட்டப்படியான நிலுவைத் தொகை ரூ. 1,18,826 மற்றும் ரூ. 21,053-க்கான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார். முன்னதாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும், பொதுமக்களும் எடுத்துக்கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ராஜம், கருவூல அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.