நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பூஜைபொருள்கள் திருட்டு

கும்பகோணம் அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பூஜைபொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :21 மே 2018, 9:10 pm

கும்பகோணம் அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பூஜைபொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (56). விவசாயி. இவரது மனைவி சொர்ணலதா. இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன ராமர், சீதா தேவி, லட்சுமணர் சிலைகள், பூஜை பொருள்கள், தங்க நகைகளை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தம்பதி காலையில் எழுந்து பார்த்தபோதுதான் வீட்டில் திருட்டு நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணசாமி அளித்த புகாரின் பேரில், பந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.