அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

சர்க்கரை ஆலை முன் ஊழியர்கள் போராட்டம்

பாபநாசம் வட்டம்,  திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்  ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:49 am IST

பாபநாசம் வட்டம்,  திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்  ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம் அருகே திருமண்டங்குடியிலுள்ள தனியார் சர்க்கரை ஆலையின் 2ஆவது பிரிவில் வேலை செய்து வரும் 154 ஊழியர்களுக்கு,  ஆலை நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையாம். 
2012 முதல் ஈட்டிய விடுப்பு பணம், 2012 முதல் மிகை ஊதியம்,  2017ஆம் ஆண்டு போனஸ் பண்டிகை முன்பணம் உள்ளிட்டவற்றை வழங்கவில்லையாம்.  இதுதொடர்பாக ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், ஆலை நிர்வாகம் ஆலை ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆலையின் தொழிற் சங்க தலைவர் வி.செளந்தர்ராஜன் தலைமையில் ஆலை ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
போராட்டத்தின் 7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆலையின் பிரதான வாசல் முன்ஆலை ஊழியர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் ஏற்கும்வரை இந்த போராட்டம் தொடரும் என ஆலை ஊழியர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.