பாபநாசம் அருகே சாலியமங்கலம் கடைவீதி பிரதான சாலையில் உடையார்கோவில் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (52) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அண்மையில் இந்தக் கடைக்கு வந்த 2 பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் நகை வாங்குவதுபோல் நடித்து, கடையிலிருந்த சுமார் 1 கிலோ மதிப்புள்ள வெள்ளிப் பொருள்களை திருடிசென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, நகைக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தனர்.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் சாமிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சுந்தரம்பாள் (48), ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த நெஞ்செழியன் மனைவி இந்திரா (45), மருங்குளம் குடிக்காடு வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (51) ஆகிய 3 பேரும்தான் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி: சொந்த வயலில் தர்பூசணி பறித்த சிறுவன் கொலை

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!

வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?
வீடியோக்கள்

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

