இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

பாபநாசம் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு

பாபநாசத்தில் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில்

Updated On :23 ஜனவரி 2019, 7:57 am IST

பாபநாசத்தில் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பாபநாசம் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகள், பழங்கள்-காய்கறி கடை, இறைச்சி கடை, பொது அங்காடிகள் உள்ளிட்ட கடைகள்,  வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. 
இதில்,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய கடைகள், நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடைகளில் பயன்பாட்டிலிருந்த  பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமாக 11,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமரகுரு மற்றும் பேரூராட்சி  மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.