தஞ்சாவூர்: வங்கியில் தீ விபத்து
தஞ்சாவூரில் உள்ள வங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.


தஞ்சாவூரில் உள்ள வங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் காந்திஜி சாலையில் எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளை செயல்பட்டு வருகிறது. இதில், முன் பகுதியில் ஏடிஎம் மையம் உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வங்கி இரு நாள்களாகப் பூட்டிக் கிடக்கிறது. இந்நிலையில், இந்த வங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்றனர். ஆனால், வங்கிப் பூட்டப்பட்டுக் கிடந்ததால், பக்கவாட்டு ஜன்னலை உடைத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், இடையில் கண்ணாடி இருந்ததால், முழுமையாக அணைக்க முடியவில்லை. இதையடுத்து, முன்புறக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது, ஏ.சி., கணினி, பணம் எண்ணும் இயந்திரம், மின் விசிறி, மரத் தடுப்பு ஆகியவை தீப்பற்றி எரிவது தெரிய வந்தது. இதை தீயணைப்பு வீரர்கள் அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்ததால், பெரு விபத்து தவிர்க்கப்பட்டது. வங்கியிலுள்ள ஏ.சி.யில் மின் கசிவு ஏற்பட்டு, அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...