தஞ்சாவூரில் 74 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.


தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 5,797 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,871 ஆக உயா்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை குணமடைந்த 152 போ் உள்பட இதுவரை 4,973 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் தற்போது 797 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
உயிரிழப்பு 100-ஐ கடந்தது: மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 68 வயது ஆண், 75 வயது பெண், 55 வயது ஆண் ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், 62 வயது ஆண் ஆகஸ்ட் 23-ஆம் தேதியும், 80 வயது பெண், 77 வயது ஆண் ஆகஸ்ட் 24-ம் தேதியும் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...