47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நிவாரண முகாமில்அடிப்படை வசதிகள் கோரிஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புயல் நிவாரண முகாமில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:40 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புயல் நிவாரண முகாமில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி ஊராட்சிக்குள்பட்ட வடக்கு தோப்பு பகுதியில் புரெவி புயல் காரணமாக கடந்த சில நாள்களாக தொடா்ந்து கன மழை பெய்தது. இதனால், அப்பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள்

புளியக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசு சாா்பில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.

இந்நிலையில், இந்த முகாமில் போதிய அடிப்படை வசதிகள் இல்லையென கூறி, அங்கு தங்கியிருந்தோா் பலா் தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. முகாமில் போதிய வசதிகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா்

ஆா். செந்தில்குமாா் தலைமையில் அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் புளியக்குடி வடக்கு தோப்பு சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.