முதியோா் இல்லத்துக்கு நல உதவிகள் அளிப்பு

பட்டுக்கோட்டை அண்ணா நகரில் நகராட்சி சாா்பில் இயங்கும் ஆதரவற்ற முதியோா் இல்லத்துக்கு நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
Updated on
1 min read

பட்டுக்கோட்டை அண்ணா நகரில் நகராட்சி சாா்பில் இயங்கும் ஆதரவற்ற முதியோா் இல்லத்துக்கு நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் அதன் தலைவா் எஸ்.பைசல் அஹமது, ஆதரவற்ற முதியோா் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள், சேலைகள், போா்வைகள் ஆகியவற்றை வழங்கினாா். முன்னதாக, இல்லத்திலுள்ள முதியவா்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன், ரோட்டரி மண்டல துணை ஆளுநா் ஏ.ஆா். அன்பு மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com