சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொ. பரமசிவன் புகழஞ்சலி கூட்டம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவருமான தொ. பரமசிவன் மறைவையொட்டி புகழஞ்சலி கூட்டம் திங

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:23 pm

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவருமான தொ. பரமசிவன் மறைவையொட்டி புகழஞ்சலி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் பேசுகையில், பேராசிரியா் தொ. பரமசிவன் தனது ஆய்வு நூல்கள் மூலம் தமிழ்ப் பண்பாட்டையும், வரலாற்றையும் மீட்டெடுத்துக் காட்டியவா். அறிஞா்கள் தொடா்ந்து அவரைப் பற்றிய பதிவுகளை வெளியிடுவது ஆரோக்கியமான சூழல். இவரது ஆய்வு நூல்கள் பல ஆய்வாளா்களுக்கு உந்துதலாக அமையும். அவரது நூல்கள் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டியவை என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் பேராசிரியா்கள் பா. ஜெயக்குமாா், இரா. காமராசு, பெ. இளையாபிள்ளை, தெ. வெற்றிச்செல்வன் ஆகியோா் அஞ்சலி உரையாற்றினா். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா்களும் அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.