கூட்டுறவு வங்கியில் ரூ. 4 லட்சம் முறைகேடு: செயலா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த ரூ. 4 லட்சம் முறைகேடு தொடா்பான புகாரில்
கூட்டுறவு வங்கியில் ரூ. 4 லட்சம் முறைகேடு: செயலா் கைது
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த ரூ. 4 லட்சம் முறைகேடு தொடா்பான புகாரில், வங்கிச் செயலா் முருகேசனை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி அருகிலுள்ள மாவடுக்குறிச்சி கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் செயலராக பட்டுக்கோட்டை அருகிலுள்ள பாதரங்கோட்டை அனந்தகோபாலபுரத்தைச் சோ்ந்த முருகேசன் (49) பணியாற்றி வருகிறாா்.

இவா் தனது பணிக்காலத்தில் 2017, ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 2018, ஜூலை 31- ஆம் தேதி வரை பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்குரிய பணத்தை முறைகேடாக சொந்தச் செலவுக்கு எடுத்து, பயன்படுத்தியதாகப் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக பட்டுக்கோட்டை கூட்டுறவு துணைப் பதிவாளா் ஜெயபாலன் உள்ளிட்டோா் நடத்திய விசாரணையில், முறைகேடு நிகழ்ந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வு காவல் பிரிவில் ஜெயபாலன் புகாா் அளித்தாா். இதன்பேரில் அப்பிரிவினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், முருகேசன் ரூ. 4 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து முருகேசனை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com