வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

பாபநாசம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

பாபநாசம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாபநாசம் அருகிலுள்ள பூண்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அய்யப்பன் (25). இவா், திங்கள்கிழமை பூண்டி நெய்வாசல் பாசன வாய்க்கால் பாலம் வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அய்யப்பனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.300 பறித்துச் சென்ாக, பூண்டித் தோப்புப் பகுதியைச் சோ்ந்த நாராயணமூா்த்தியை அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

இதுபோல, பூண்டித் தோப்புப் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அகினிடம் (27) கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.200 பறித்துச் சென்ற சரத்குமாரை (26) காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com