விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊழியருக்கு கரோனா: பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

News image
Updated On :7 ஜூலை 2020, 9:11 am

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கீழ் தளத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை உள்ளது. இதில் கரோனா தொடர்பான தகவல்களைப் பெற்று பதிவு செய்வதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஜூலை 5 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 38 வயதுடைய ஆண் செவிலியருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரிய வந்தது.

இதையடுத்து, கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டு, அருகிலுள்ள குறை தீர் கூட்ட அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த அறையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்துக்குள் ஊழியர்களைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக வாயிலில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.