விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூர் சிறையில் கைதிக்கு கரோனா 

தஞ்சாவூர் சிறையில் கைதிக்கு கரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிய வந்தது.

News image
Updated On :27 ஜூலை 2020, 3:57 am

தஞ்சாவூர் சிறையில் கைதிக்கு கரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிய வந்தது.

தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிளைச் சிறை உள்ளது. தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறு வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்படுபவர்கள் இச்சிறையில் அடைக்கப்படுவர். இதில் தற்போது 113 கைதிகள் உள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த 42 வயது ஆண் நபரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் மதுபானம் பதுக்கல் தொடர்பான வழக்கில் அண்மையில் கைது செய்து, இச்சிறையில் அடைத்தனர்.

Story image

சிறைக்குள் அடைக்கப்படுவதற்கு முன்பு இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எனவே இவர் சிறைக்குள் தனியாக அடைக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு  வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவில் இவருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.