சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

10 ஆண்டுகளாகத் தண்ணீர் வராத வாய்க்கால்: விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் அருகேயுள்ள வாய்க்காலில் 10 ஆண்டுகளாகத் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:47 pm

DIN

தஞ்சாவூர் அருகேயுள்ள வாய்க்காலில் 10 ஆண்டுகளாகத் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தியில்  காவிரி வடிநிலக் கோட்டத்துக்கு உள்பட்ட குடமுருட்டி ஆற்றிலிருந்து திருத்துக்கால் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால், 1,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவுக்கு நேரிடையாகப் பாசன வசதி பெறுவதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தைச் செறிவூட்டுவதற்கும் பயன்பட்டு வந்தது. 

இந்த வாய்க்காலில் 70 சதவீதம் பல வகைகளில் ஆக்கிரமிப்பில் உள்ளது. 

இதனால் இந்த வாய்க்காலில் 10 ஆண்டுகளாக நீரோட்டம் தடைபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அப்பகுதி விவசாயிகள் 2011 ஆம் ஆண்டு முதல் மனு அளித்து வருகின்றனர் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  

மேலும் பேரூராட்சிப் பகுதியில் உள்ள பி மற்றும் சி பிரிவு வாய்க்கால்களிலும் தூர் வாரப்படவில்லை.

 எனவே, திருத்துக்கால் வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஊரகப்பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் பி மற்றும் சி பிரிவு வாய்க்கால்களைச் சீரமைப்பது போல், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியிலும் பி மற்றும் சி பிரிவு வாய்க்கால்களைச் சீரமைக்க வலியுறுத்தியும் கண்டியூர் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத் துணைத் தலைவர் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் தலைமையில் பலர் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.