ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கல்லணை ஜூன் 16-இல் திறக்கத் திட்டம்

மேட்டூர் அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை ஜூன் 16 ஆம் தேதி திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம கோவிந்த ராவ்.

News image
Updated On :12 ஜூன் 2020, 9:31 am

DIN

மேட்டூர் அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை ஜூன் 16 ஆம் தேதி திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம கோவிந்த ராவ்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தது: மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கல்லணையிலிருந்து ஜூன் 16 ஆம் தேதி தண்ணீர் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அந்தந்தப் பகுதிக்குத் தண்ணீர் வருவதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

மீதம் உள்ள 20 சத பணிகளும் அந்தந்தப் பகுதிக்குத் தண்ணீர் செல்வதற்குள் முடிக்கப்படும். இந்த முறை தண்ணீர் விரயமாகாமல் கடைமடைப் பகுதிக்கு நிச்சயமாக சென்றடையும் என்றார் ஆட்சியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.