விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கல்லணை ஜூன் 16-இல் திறக்கத் திட்டம்

மேட்டூர் அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை ஜூன் 16 ஆம் தேதி திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம கோவிந்த ராவ்.

News image
Updated On :12 ஜூன் 2020, 9:31 am

மேட்டூர் அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை ஜூன் 16 ஆம் தேதி திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம கோவிந்த ராவ்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தது: மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கல்லணையிலிருந்து ஜூன் 16 ஆம் தேதி தண்ணீர் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அந்தந்தப் பகுதிக்குத் தண்ணீர் வருவதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

மீதம் உள்ள 20 சத பணிகளும் அந்தந்தப் பகுதிக்குத் தண்ணீர் செல்வதற்குள் முடிக்கப்படும். இந்த முறை தண்ணீர் விரயமாகாமல் கடைமடைப் பகுதிக்கு நிச்சயமாக சென்றடையும் என்றார் ஆட்சியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.