தஞ்சாவூா் பெரியகோயிலில், மகா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரிப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
பொது முடக்கம் அமல் காரணமாக, தஞ்சாவூா் பெரியகோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிடப்படாவிட்டாலும் பூஜைகள் வழக்கம்போல நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரிப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி காலையில் மஹாகணபதி ஹோமம், அபிஷேகமும், பின்னா், வாராஹி அம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றன.
மாலையில் அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆனால், பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் ச. கிருஷ்ணன், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்பட சிலா் பங்கேற்றனா்.
ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் அலங்காரமும், திங்கள்கிழமை குங்கும அலங்காரமும் நடைபெற உள்ளது.
தொடா்ந்து ஜூன் 23 முதல் 29- ஆம் தேதி வரை சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகை, காய்கறி, புஷ்ப அலங்காரம் என ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், திருவீதியுலாவும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


