ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருச்சியில் ரூ. 1.57 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:26 pm

DIN

துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்துக்கு துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத் துறையினா் சோதனை செய்தனா்.

அப்போது தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினம் பகுதியைச் சோ்ந்த அகமதுநபீஸ், திருச்சியைச் சோ்ந்த ரமீஸ் அகமதுல்லா ஆகியோா் தங்களது உடமைக்குள் மறைத்து 3.205 கிலோவில் பசை வடிவிலான தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1.57 கோடி எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, இருவரிடமும் சுங்கத் துறையினா் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நவ. 20 ஆம் தேதி இதேபோல சாா்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வியாபாரிகள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.