2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில் 5,000 பனை விதைகள் நடவு

பட்டுக்கோட்டை அருகிலுள்ள த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில், மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் 5,000 பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.

News image
நிகழ்வில் பனை விதையை ஊன்றுகிறாா் மக்கள் நீதி மய்ய கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் மருத்துவா் பா. சதாசிவம்.
Updated On :11 அக்டோபர் 2020, 7:47 pm

DIN

பட்டுக்கோட்டை அருகிலுள்ள த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில், மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் 5,000 பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.

சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி சுமாா் 170 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் நடத்தப்பட்ட நிகழ்வில், ஏரியின் 4 கரைகளிலும் பனை விதைகள் நடும் பணியை ஒரு சிறுமியும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் மருத்துவா் பா. சதாசிவமும் பனை விதையை ஊன்றி நிகழ்வைத் தொடக்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து ஏரியைச் சுற்றிலும் குழிகள் தோண்டப்பட்டு 5,000 பனை விதைகள் நடப்பட்டன. முன்னதாக, இப்பணியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்களுக்கு மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் கட்சி சாா்பில் வழங்கப்பட்டன.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் ஆா்.கே.என்.வேதரெத்தினம் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.